Monday, May 18, 2026

இலையா, சூரியனா? போடு விசில்.Whistle your way to State-craft.

இலையா ?
சூரியனா?
எதற்கு வாக்களிப்பது?
பெருந்தலைவர் வேறு இரண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்றாரே. திருவாளர் பொது ஜனம் குழம்பிப் போயினர்.
ஆஹா வெள்ளித் திரையிலிருந்து ஒரு நக்ஷத்திரம் வந்திருக்கிறாரே. அவரையே அமோக வெற்றி பெறச் செய்வோம் என்று வாக்களித்தாயிற்று.
போகப் போகத் தானே தெரியும், இந்தப் பூவின் வாசம் புரிய.

While keeping fingers crossed, we, the Am Admi, have all the rights to know what are the sine qua non of a good leader and in whose hands the responsibility of good state administration is to be vested.

Maha Swami takes us back to the nitty gritties of Election during Chozha Era, esp., to Uthiramerur உத்தமத் தேர்தல் முறை. In the process of narrating what kind of a candidate is eligible to contest, He refers to number of characteristics for a candidate elaborated in the தேர்தல் முறை.

Here is an excerpt from தெய்வத்தின் குரல், vol 4 dealing with all round integrity of a candidate:


இந்தக் காலத்தில் சிலபேரைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் – பணவிஷயத்தில் ரொம்பவும் ந்யாயமாயிருப்பவர். கணக்குகளில் ரொம்பவும் கறார் என்று. ஆனாலும் இப்படிப்பட்டவர்களுடைய ஆல்-ரௌண்ட் காரக்டரை(எல்லா அம்சங்களிலும் அவர்களுடைய நடவடிக்கைகளை)ப் பார்த்தால் அவற்றில் சிலதில் த்ருப்தி இல்லாமலும் பலபேருடையது இருக்கிறது. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாமலிருக்கிறது. படிப்பு, வயஸு, கார்யத்திறமை எல்லாம் சேர்ந்து, நடத்தையிலும் எல்லா அம்சங்களிலும் சுத்தமாக இருக்கிறார்களா என்று பார்த்தால் எங்கேயாவது இடறுகிறது. நாமும் ‘பரவாயில்லை; அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாட்டா பாதகமில்லை’ என்று இவர்களிடம் நாட்டு நிர்வாஹத்தை ஒப்புவிக்கிறோம். ஆனால் ‘ஹ்யூமன் நேச்சர்’ (மனுஷ்ய இயற்கை) போகிற போக்கில், இப்படிக் கலந்தாங்கட்டிகளாக இருக்கிறவர்களுக்கு ஒரு பதவி, ஸ்தானம் என்பது கிடைத்த பிறகு, ஐந்துக்கு இரண்டு என்பது ஒன்று, அரை, கால், ஸைஃபர் என்று சரிந்துகொண்டே போகிறது. இதனால்தான், அர்த்த சுத்தத்தை மட்டும் சொல்லாமல், ஆனாலும் அதுதான் பொது நிர்வாஹத்தில் மிகவும் முக்யமான விஷயமாதலால், அதைப் பிரித்து முதலிடம் கொடுத்துச் சொல்லி, அதோடுகூட ‘ஆத்மசுத்தம்’ என்பதாக ஒருவனுடைய ஆல்-ரௌண்ட் காரக்டரும் பழுதில்லாமல் பூர்ணமாயிருக்க வேண்டுமென்று விதியில் சேர்த்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஆஸ்திக்யம், சாஸ்திராபிமானம், தெய்வத்திடம் பயபக்தி, அடக்கம், கட்டுப்பாடு முதலிய எல்லாமே பொதுவாக ஜன ஸமூஹத்தில் ஆழமாகப் பரவியிருந்ததால் மக்களின் காரக்டர் – லெவல் மிகவும் உயர்வாயிருந்தது. இன்றுபோல் தப்பு வழிகளில் இழுக்கிற அநேகக் கவர்ச்சிகளும் அப்போது கிடையாது. எனவே, சல்லடை போட்டுத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டுமென்றில்லமால் அங்கேயும் ஒரு சிலர் பூர்ணமாக ஆத்ம சுத்தமுடையவர்கள் என்னும்படியாக இருந்துகொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் பொது நிர்வாஹத்துக்கு வரலாம், வரமுடியும் என்று ஐந்தாவது clause (ஷரத்து) நிர்ணயித்து விடுகிறது.

Sunday, May 10, 2026

கல்வித் தகுதி - how important is educational qualification

வேட்பாளருக்கான கல்வித் தகுதி வேண்டுமா?

One may wonder what a question it is!

True, it's heartening to see many in 2026 TN council of Ministers are qualified - two Drs, one out of whom was an ex bureaucrat, tax Administrator, another an Engineer turned lawyer. Majority in the first oath taking 9 are higher education qualified.

But, the quintessential question ❓ is what's the prerequisite qualification - as per our Sastras - to become a member. In post independence era, we go by Our Constitution when it comes to anything in life. What, Maha Swami refers to as good education is, beyond modern contemporary academic campuses, deep value systems embedded in Sastras. Unfortunately Sastras are mistaken as a particular religion oriented. Our people have pride in declaring their allegiance to திருக்குறள். At the question how one finds out and learn Sastric codes, Maha Swami pointed to திருக்குறள், நன்னெறி. All these epics deeply imbed the very essence of the Sastras.

If our Netas' affinity for Thiruvalluvar is beyond ken of doubt, திருக்குறள், நன்னெறி have to be our Gospels and in people's expectations of adherence to these Holy texts in State-craft by their Honorable Representatives, we would pave way for Good Governance and harmony here.

Here's excerpt of Maha Swami's reference:
கல்வித் தகுதி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
Toggle navigation
காமகோடி
வயஸு நிர்ணயம் சாஸனத்தின் ஸபை அங்கத்தினருக்கு விதித்த மூன்றாவது யோக்யதாம்சம். நாலாவது யோக்யதாம்சம் கல்வி பற்றியது. ஸபை அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நல்ல படிப்பாளியாக இருக்கவேண்டும் என்று விதி செய்திருக்கிறது. அந்தக் காலத்தில் படிப்பு என்றால் முக்யமாக சாஸ்த்ரப் படிப்புதான்.

எல்லாம் சாஸ்திரந்தான்– டான்சை பரத சாஸ்திரம் என்கிறோம், ஸயன்சை விஞ்ஞான சாஸ்திரம் என்கிறார்கள். ஆனாலும் பழையநாள் கல்வித் திட்டத்தில் சாஸ்திரம் என்றால் முதலில் ஆத்மாவைப் பற்றிய, பரமாத்மாவைப் பற்றிய வைதிகமான சாஸ்திரங்கள்தான்; அப்புறம் அதற்குள்ளேயே ஸூசனையாக வருகிற நன்னெறி, நல்வழிக்கோட்பாடுகளை விவரித்து விஸ்தாரமாக விதிகள் வகுத்து எழுதிய தர்ம சாஸ்திரம் , நீதி சாஸ்திரம் முதலியன; அதற்கப்புறம் காவ்யம், ஜாகரஃபி, ஹிஸ்டரி, கணிதம், ரஸாயன சாஸ்திரம் (என்கிற கெமிஸ்ட்ரி) பௌதிக சாஸ்திரம் (என்கிற ஃபிஸிக்ஸ்) இத்யாதிகள் – அறுபத்துநாலு கலைகள் என்பதில் எல்லா ஸயன்ஸ், ஆர்ட்ஸ் விஷயங்களும் வந்துவிடும். அத்தனையிலும் முக்யம் வைதிக வாழ்க்கை முறையையும் ஆசார அநுஷ்டானத்தையும் சொல்லும் சாஸ்திரம். எத்தனை சாஸ்திரங்களிருந்தாலும் ‘சாஸ்திரிகள்’ என்று அந்த ஒரு சாஸ்திரம் அறிந்தவரைதான் சொல்கிறோம் ? இப்போது கல்வி முறைக்கு அடியோடு ஸம்பந்தமில்லாததாக, பொது ஜனங்களை ‘முன்னேற்றும்’ கல்விக்கு முட்டுக்கட்டையாக இருப்பதென்றே விரோத பாவத்துடன் கருதப்படுவதாக இருக்கின்ற வேத தர்ம ஸமயாச்சாரந்தான் அன்றைய கல்வி முறைக்கு அச்சாக, ஆணிவேராக இருந்தது. இப்படிப்பட்ட கல்வியில் தேர்ச்சி பெற்றவரே ஊர் ஸபைத் தேர்தலுக்கு அபேக்ஷகராக இருக்கமுடியும் என்று விதி செய்திருக்கிறது.