Friday, July 8, 2022

விவாஹம் - எட்டு விதங்கள்

விவாஹம் - எட்டு விதங்கள்

தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருப்பன:

1. பிராமம்;
2.தைவம்;
3. ஆர்ஷம்;
4.  ஆஸுரம்
5. பி ராஜாபத்தியம்;
6. காந்தர்வம்;
7. ராக்ஷஸம்;
8. பைசாசம்.



1. பிராமம்

பிள்ளையின், குருகுலவாஸம் முடித்து அகம் திரும்பிய,  பெற்றோர்கள் நல்ல குலத்துப் பெண்ணின் மாதா-பிதாவை அணுகி கன்யாதானம் செய்து தரச்சொல்வது.  வரதக்ஷிணை, பரிசம் எல்லாம் இங்கே இரண்டாம் பட்சம். தலையாயது இரண்டு குலங்கள் அபிவிருத்தியாக வேண்டும் என்பதே பிராமம் என்கிற விவாஹம். 

2.தைவம்

உரிய காலத்தில் பிள்ளை வீட்டார் பெண் கேட்டு வராத நிலையில் பெண் வீட்டாரே வரன் தேடிச் செல்வது. 

உயர்ந்த ஸ்தானத்தில் ஸ்திரிகுலத்தை மேன்மையுறச் செய்கிற சாஸ்திரத்தில், பெண்ணைப் பிள்ளை வீட்டார் தேடி வருவதே சிலாக்கியமான விவாஹம். மிகவும் சிரேஷ்டமானது. 

3. ஆர்ஷம்

இவ் விவாஹம் உரிய காலத்தில் விவாஹம் ஏற்படாத நிலையில் பிள்ளை தருகிற திரவியம் - பொருளைப் பெற்றுக்கொண்டு,  மணம் முடிப்பது. 

4. பிராஜாபத்தியம் -

அவஸர கதியில் வரன் தேடிச் சென்று செய்கிற விவாஹம். 

5. ஆஸுரம் -

 அசுர வேகத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் தகுதியானவான,பொருத்தமானவனா என்றெல்லாம் கருதாது,  தான் நினைத்த பெண்ணை அவள் பெற்றோரிடமோ, உறவினரிடமோ பொருட்களைக் கொடுத்து வசப்படுத்திக் கொள்கிற விதமான விவாஹம் இது. 

6. காந்தர்வம்

காதலால் கசிந்து உருகிக் கொள்ளும் விவாஹம். உதாரணம்: சகுந்தலை, துஷ்யந்தன் விவாஹம். 

7. ராக்ஷஸம்

பெண்ணுக்கும் பிள்ளையிடத்தில் விருப்பம். பிள்ளைக்கும் அவ்வண்ணமே. இருப்பினும் பெற்றோர் தடை. தடையை வென்று செய்து கொள்ளும் விவாஹம்  இவ்விதம். உதாரணம் பகவான் கிருஷ்ணர் -ருக்மணி விவாஹம். 

8. பைசாசம்

இது அத்துமீறல் விவாஹம். பெண் இஷ்டம் என்னவென்பதைக் கருத்தில் கொள்ளாது வற்புறுத்தி நடைபெறும் விவாஹம். 

அனைத்து விதங்களும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், கிருஹலக்ஷ்மியாக இருக்க வேண்டியவளை பிள்ளையின் மாதா-பிதா தேடிவந்து,  கேட்டுப் பண்ணிக் கொள்கிற முதலாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் விதமான 'பிராமம்' தான் சாலச் சிறந்தது.